சென்னை: நல்லாட்சியில் தமிழகம் முதலிடம் பெற்றதை அடுத்து அனைத்துத்துறை செயலர்களுக்கும் முதல்வர் நன்றி கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையை எட்ட உதவிய அனைத்து அரசு ஊழியர்களுக்கும் நன்றி, பாராட்டுக்கள் என அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா கனவை நனவாக்க சிறப்பாக செயல்படும் வகையில் துறை செயலர்களின் பணி அமைந்துள்ளது.