×

அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் முதற்கட்டமாக வருகின்ற 15-ந்தேதி கையெழுத்தாகும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா: அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக  ஒப்பந்தம் முதற்கட்டமாக வருகிற 15-ந்தேதி கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

 
இதைத்தொடர்ந்து  இரு தரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில்  இதன் பலனாக கடந்த மாதம் 14-ந் தேதி இரு நாடுகள் இடையே முதல் கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சீன இறக்குமதி பொருட்கள் மீதான கூடுதல் வரியை அமெரிக்கா ரத்து செய்தது. அதேபோல் சீனாவும் அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பை நிறுத்தி வைத்தது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் வருகிற 15-ந்தேதி கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அவர் கூறினார். இந்த முதற்கட்ட ஒப்பந்தமானது, இரு பொருளாதார சக்திகளுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்கும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து  முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் சீனாவுக்கு சென்று 2-ம் கட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கப்போவதாக டிரம்ப் தெரிவித்தார்.

Tags : Trump ,US ,trade pact ,China ,announcement ,signing , US, China, trade pact, first signing of 15th coming, US President Trump, announcement
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்