×

ஆங்கில புத்தாண்டையொட்டி முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து துணை முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்த்து

சென்னை: புத்தாண்டையொட்டி முதல்வர் எடிப்பாடி பழனிச்சாமியை நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, ராஜேந்திரபாலாஜி, சேவூர் ராமச்சந்திரன், சரோஜா மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர்  சந்தித்து மத்திய அரசு சிறந்த நல்லாட்சிக்கான பல்வேறு குறியீடுகளில் தமிழகத்தை முதல் மாநிலமாக தெரிவு செய்து அறிவித்தமைக்காகவும், ஆங்கில புத்தாண்டையொட்டியும் மலர்கொத்து வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இதேபோன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர், சரோஜா மற்றும் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் பொன்னையன், தளவாய்சுந்தரம், கோகுலஇந்திரா, ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன் மற்றும் பலர் சந்தித்து பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : OPS Govt , Vice-Principal OPS Govt. Greetings
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...