×

பிரச்னைகளை ஏற்படுத்த முயற்சி பாஜ.வின் தந்திரங்கள் ஆரம்பமாகி விட்டது: அமைச்சர்களுக்கு உத்தவ் எச்சரிக்கை

மும்பை: ‘அரசுக்கு புதுப்புது பிரச்னைகள ஏற்படுத்த பா.ஜ தனது பலத்தையும் பிரயோகிக்கும் என்பதால் அந்த கட்சியிடம் அமைச்சர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,’ என்று முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா அமைச்சர்களை நேற்று முன்தினம் மாலை முதல்வர் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது; பா.ஜவிடம் அனைத்து அமைச்சர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களையும், இந்த அரசையும் இழிவுபடுத்த பா.ஜவினர் தீவிர முயற்சிகளை மேற்கொள்வார்கள். அவர்களின் வலைக்குள் விழுந்து விடக்கூடாது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

இந்த கூட்டணி அரசுக்கு புதுப்புது பிரச்னைகளை உருவாக்க பா.ஜ தனது முழு பலத்தையும் பிரயோகிக்கும். ஏற்கனவே அக்கட்சி தனது தந்திரங்களை செயல்படுத்த தொடங்கி விட்டது. பா.ஜவின் முயற்சிகளை முறியடிக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும். பிரச்னைகளை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அமைச்சர்களான நீங்கள் பொறுப்பை உணர்ந்து வெளியிடத்தில் பேச வேண்டும்.


Tags : BJP ,Uthav ,ministers , Attempts to cause problems, ministers, Uthav, warning
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...