×

வண்ணாரப்பேட்டையில் சிறுவன் ரேஸ் சென்ற பைக் மோதி விபத்து : 3 பேர் படுகாயம்

தண்டையார்பேட்டை: புத்தாண்டை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இதில் சாலையோரம் நின்றிருந்த கார் மீது பைக் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். கார் பலத்த சேதமடைந்தது. புத்தாண்டை முன்னிட்டு வடசென்னையில் பைக் ரேஸ் நடைபெறுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் ஒருசில இடங்களில் பைக் ரேஸ் நடைபெறுவதை தடுக்க பாதுகாப்பு சோதனை குறைவாக இருந்ததாகவும், சாலையில் தீப்பொறி பறக்க பைக்குகள் பறந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் வண்ணாரப்பேட்டை, ஜமால் தெருவை சேர்ந்த இம்ரான் (24) என்பவர், தனது காரில் ஐ.டி ஊழியர்களை இறக்கிவிட்டு, திருவொற்றியூர் வழியாக வீடு திரும்பினார். அப்போது அங்கு ரேஸில் அதிவேகமாக வந்த ஒரு பைக் திடீரென இம்ரான் கார் மீது மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது.

பைக்கை கஜேந்திரன் (15) என்ற சிறுவன்  ஓட்டி வந்துள்ளார். அவனுக்கு பின்னால் கார்த்திஸ்வரன் (20),  சத்தியஜெயேந்திரர் (18) ஆகிய இருவரும் அமர்ந்து வந்துள்ளனர். இந்த விபத்தில் பைக்கில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.



Tags : Balaramapuram , Bike ,collision, Balaramapuram,Three injured
× RELATED ஆதனூர் ஊராட்சியில் 17 இடங்களில் குடிநீர் வசதி; ஊராட்சி தலைவர் ஏற்பாடு