×

காஷ்மீர் எல்லையில் 2 வீரர்கள் வீரமரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாத ஊடுருவலைத் தடுக்க முயன்ற போது நடந்த துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீர் ரஜோவுரி மாவட்டத்தின் நவ்ஷெரா பகுதியில் உள்ள காரி திரயாத் வனப்பகுதி வழியாக நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அங்கு ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், `` துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் அர்ஜீன் தபா மகர் (25), நாயக் சவாந்த் சந்தீப் ரகுநாதன் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களது தியாகம், தேசப்பற்றுக்கு நாடு என்றென்றும் கடன்பட்டுள்ளது’’ என்று கூறினார்.


Tags : soldiers ,Kashmir ,border , 2 soldiers,killed, Kashmir,border
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!