கொழும்பு: இந்திய அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள இலங்கை அணியில் ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி கவுகாத்தியில் ஜன. 5ம் தேதி நடக்கிறது. அடுத்து இந்தூர் (ஜன. 7), புனேவில் (ஜன. 10) இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன இந்த தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மேத்யூஸ் மீண்டும் டி20 அணியில் இடம் பிடித்துள்ளார்.
இலங்கை: லசித் மலிங்கா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, குசால் பெரேரா, நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெயா டி சில்வா, இசுரு உடனா, பானுகா ராஜபக்ச, ஒஷதா பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்கா, லாகிரு குமாரா, குசால் மெண்டிஸ், லக்ஷன் சந்தகன், கசுன் ரஜிதா.