டெல்லி: டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே மரியாதை செலுத்தினார். இந்திய ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நேற்று பொறுப்பேற்றார். அவரிடம், ராணுவ தளபதியிலிருந்து ஓய்வு பெறும் பிபின் ராவத் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார். மனோஜ், தற்போது கிழக்கு பிராந்திய தளபதியாக உள்ளார். சீனாவுடனான எல்லையை பாதுகாக்கும் இந்திய ராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவுக்கு தலைமை வகித்திருந்தார்.