சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்ச்சி வேளச்சேரியில் உள்ள திருமாவளவன் இல்லத்தில் நேற்று நடந்தது.
பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்களின் வேகத்தையும் வீரியத்தையும் வலுவிழக்க செய்வதற்கு, திசை திருப்புவதற்கு ஏதுவாக அமைந்துவிடும் என்பதால் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்.