×

விமான தாக்குதலில் 25 பேர் பலி அமெரிக்க தூதரகம் மீது ஈராக் மக்கள் தாக்குதல்

பாக்தாத்: அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 25 பேர் பலியானதை கண்டித்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது மக்கள்  தாக்குதல் நடத்தினர்.  ஈராக்கின் மேற்கு முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க படை வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், 25 பேர் கொல்லப்பட்டதற்கு ஈராக் அரசும், மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தில் ராணுவ உடை அணிந்த ஆண்களும், பெண்களும் நேற்று கண்டன பேரணி சென்றனர்.

அப்போது, அமெரிக்க தூதரகம் மீது  தாக்குதல் நடத்தினர். தூதரக அலுவலகத்தை மூடுமாறும் முழக்கமிட்டனர். ‘அமெரிக்க படை ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது நாங்கள் அவர்களை விரட்டுவோம்,’ என்ற பதாகைகளையும் ஏந்தி சென்றனர். அப்போது அமெரிக்க கொடியும் எரிக்கப்பட்டது, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் அவர்கள் அடித்து நொறுக்கினர். அவர்களை அமெரிக்க வீரர்கள் தடியடி நடத்தி கலைத்தனர்.

Tags : embassy ,Iraqi ,US , Iraqi people,attack ,US embassy, killing ,25 people
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...