×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயன்பாட்டிற்கு வராத சேவை மையம்: திறக்க வலியுறுத்தல்

பாப்பிரெட்டிப்பட்டி:  பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் சேவை மையத்தை திறக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே பூதநத்தம் ஊராட்சியில் 2013-14ம் ஆண்டு ரூ10 லட்சம் மதிப்பில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில், கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது.

ஆனால் பணிகள் முடிந்து 6ஆண்டுகளாகியும், ெபாதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. இதனால், வருமான வரி, சாதி, பிறப்பு சான்றிதழ் பெற மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சேவை மையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Papyrettipatti, Centre de service
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு 2...