×

ராஜபாளையம் அருகே தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: மக்கள் அவதி

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தெருவில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ராஜபாளையம் அருகே செட்டியார் பட்டி பேரூராட்சியின் 13 மற்றும் 14 வது வார்டுக்கு இடைப்பட்டது அந்தோணியார் பள்ளி தெரு.  இந்த பகுதியில்  நான்கு தெரு சந்திக்கும் இடத்தில் வாறுகால்களில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பல நாட்களாக தெருவின் மத்தியில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கோ, இருசக்கர வாகனங்களில் செல்வதற்கோ மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடி நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் நடந்து செல்லும் பொழுது, இருசக்கர வாகனங்கள் சென்றால் சாக்கடை கழிவுநீர் சீருடையில் தெறிக்கிறது. சுகாதார சீர்கேடுகளால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சாக்கடைக் கழிவுகளை தெருவில் தேங்காத வண்ணம் வாறுகால் அடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


Tags : street ,People Rajapalayam , Rajapalayam, Sewerage, People
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...