×

இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரி கடற்கரை சாலையில் 2 கி.மீ. நடந்து சென்று ஆய்வு செய்தார் ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில துணைநிலை ஆளுநர்  கிரண்பேடி நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். உலக முழுவதும் இன்று இரவு ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுவதை ஒட்டி புதுச்சேரி  கடற்கரை சாலையில் அதிகளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடற்கரை சாலைக்கு வரும் மக்களின் பாதுகாப்பு குறித்தும், குடிநீர் மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும்  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார். நேற்றிரவு கடற்கரை சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகாரிகளுடன் நடந்து  சென்ற கிரண்பேடி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

நேற்று காலையில் முதல்வர் நாராயணசாமி புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், ஆளுநர்  கிரண்பேடி நேரடி கள ஆய்வில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கிரண்பேடியின் செயலை கண்டித்து போட்டி அரசாங்கம் நடத்துவதை  நிறுத்துங்கள் என முதல்வர் நாராயணசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : Kurnapedi ,New Year Celebration ,Puducherry Beach Road , Tonight's New Year Celebration: 2km off Puducherry Beach Road. Governor Kurnapedi went and studied
× RELATED மழை எதிரொலி: புதுச்சேரி கடற்கரை சாலையில் பொதுமக்கள் செல்ல போலீசார் தடை..!!