சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மக்களின் தீர்ப்பு நிச்சயம் நமக்கு நம்பிக்கையை வழங்கும். புத்தாண்டில் ஜனநாயகத்தின் புத்தொளி பிறக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நீதிமன்ற உத்தரவும், ஆணையம் அளித்த உறுதி மொழிகளும் சரியாக பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் சட்ட விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என கவனிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.