சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டும். நாட்டில் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திடவும் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.