×

ரூ. 30,000க்கு அண்டத்தை பெற்று பல லட்சத்திற்கு விற்பனை : கேரளாவில் கருத்தரித்தல் சிகிச்சை பெயரில் மோசடி

திருவனந்தபுரம் : கேரளாவில் பெண்களின் அண்டத்தை திருடி விற்பனை செய்யும் கும்பல் குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய கேரள மாவட்டங்களில் கிட்னி, இதயம், கணையம் போன்று அண்டம் விற்பனைக்கான இடைத் தரகர்களும் அதிகளவில் நடமாடுவது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த கும்பல் வறுமையில் வாடும் இளம் பெண்களை கண்டறிந்து நயவஞ்சகமாக அவர்களின் அண்டத்தை அபகரிக்கும் வேளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

கருத்தரிப்புக்கு முக்கிய உள் உறுப்பாக உள்ள அண்டத்தை அதிகபட்சமாக 30,000 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏழை பெண்களின் பெறுவது உறுதியாகி உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநில பெண்களும் அண்டம் தானம் செய்ய கேரளாவுக்கு கொண்டு வரப்படுவது தெரியவந்துள்ளது. கருத்தரித்தல் சிகிச்சை என்ற பெயரில் இந்த மோசடி நடைபெற்று வருவதாக மலையாள செய்தி தொலைக்காட்சி ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. கருவுறாமை பிரச்சனை உள்ள பெண்களுக்கு மற்ற பெண்களின் அண்டம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கும்பலை பிடிக்க கேரள போலீசார் களம் இறங்கியுள்ளனர்.


Tags : millions ,Kerala Rs ,Universities ,Kerala , Kerala, fertilization, treatment, fraud, sales
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...