×

வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம் வாபஸ்

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் கடந்த 21ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.  9வது நாளான நேற்று முன்தினம் காலை பழங்கள் கூட சாப்பிடாமல் உண்ணாவிரதத்தை தீவிரப்படுத்தினார். இதனால் 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. நேற்று முன்தினம் மாலை அவர் தானே சமைத்து சாப்பிட அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்பதாக சிறை கண்காணிப்பாளர் உறுதி அளித்ததால், முருகன் இளநீர் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.

Tags : Murugan ,Vellore Central Prison Vellore Central Prison , Murugan fasting ,Vellore Central Prison
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...