×

நடிகை சஞ்சனா மீது மானநஷ்ட வழக்கு: பெண் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் மனு

பெங்களூரு: நடிகை சஞ்சனா மீது தயாரிப்பாளர் வந்தனா மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். கன்னட  பிரபல நடிகை சஞ்சனா, கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளர்  வந்தனாவுடன் தனியார் ஓட்டலுக்கு சென்றிருந்தார். அப்போது இருவருக்கும்  இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு,  சஞ்சனா, தயாரிப்பாளர் வந்தனா மீது பெங்களூரு மாநகர கமிஷனர் மற்றும் துணை  கமிஷனரிடம் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்ற போலீசார் வழக்கு  பதிவு செய்தனர். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு  செய்திருந்தனர். இந்நிலையில் நடிகை சஞ்சனா, தயாரிப்பாளர் வந்தனாவுடன்  எந்தவிதமான கருத்துவேறுபாடும், மோதலும் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் வந்தனா, சஞ்சனா மீது  நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.



Tags : Sanjana ,producer ,lodges ,Female , Actress Sanjana, Female Producer, Court
× RELATED சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’