சென்னை: 969 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 11, 12ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதையொட்டி எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கும் செய்து கொள்ளலாம்.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை) பதவிக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய குழுமம் அறிவித்தது. பின்னர் அவர்களுக்கான எழுத்து தேர்வு வரும் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்க வசதியாக www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் செல்போன் எண்ணை குறுஞ்செய்தி அனுப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் இணையதளத்தில் இருந்து தங்களுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.