×

வீடுகளில் கொள்ளை

அண்ணாநகர்: கோயம்பேடு, ஜெய்நகர் பூங்கா பின்புறம் உள்ள தெருவில் வசிப்பவர் கவிதா (43). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மேல்மாடி அறையை உள்பக்கமாக பூட்டாமல் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 12 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பினான். காலையில் கண்விழித்து பார்த்த கவிதா, வீட்டில் பொருட்கள் திருடப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதேபோல் அங்கு வசிக்கும் செல்வகுமார் என்பவரது வீட்டிலும் புகுந்து, பீரோவில் வைத்திருந்த ₹5 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவங்கள் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர். அதன்படி இருவரது வீடுகளிலும் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த அரும்பாக்கம், ஜெய்நகரை சேர்ந்த மகேந்திரன் (21) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 12 பவுன் நகையை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags : homes , Robbery
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை