×

எர்ணாவூரில் ஆவின் பால் வழங்குவதில் தாமதம் : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட எர்ணாவூர், பிருந்தாவன் நகரில் உள்ள ஆவின் பூத்தில் (எண்551) நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. குடும்ப தலைவிகள், முதியவர்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வந்து இந்த பாலை வாங்கி செல்வார்கள்.  இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக காலை 3 மணி முதல் 4 மணிக்குள் வரவேண்டிய ஆவின் பால் 6 மணி அல்லது 7 மணிக்குதான் பால் பூத்துக்கு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அதிகாலை அதிகமாக பனிப்பொழிவு இருப்பதால் ஆவின் பாலுக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு தலைவலி, தும்மல், சளி பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னை ஏற்படுகிறது. எர்ணாவூர் மட்டுமின்றி திருவொற்றியூர், மணலி புதுநகர், மணலி போன்ற பகுதிகளிலும் காலதாமதமாக ஆவின் பால் வருவதாக கூறப்படுகிறது. எனவே, ஆவின் நிர்வாகம் தலையிட்டு பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



Tags : Ava ,Ernakulam , Ernavur, Auvin Paul
× RELATED சென்னையின் பல்வேறு பகுதிகளில் பால்...