காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த சில நாட்களாக, ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் தற்காலிகமாக கூட போரை நிறுத்தும் திட்டம் எதுவும் கிடையாது என்பதே உண்மை என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தலிபான்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானின் ஜாவ்சான் மாகாணத்தில் நடந்த இத்தாக்குதலில் அரசு ஆதரவு அமைப்பை சேர்ந்த 13 பேர், போலீஸ் ஒருவர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தான் அரசு நடத்திய தாக்குதலில் 30 தலிபான்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.