×

திருவனந்தபுரம் மியூசியம் பூங்காவில் பெண் அதிகாரி முன்பு நிர்வாண போஸ்: வாலிபர் மீது போலீசார் வழக்கு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மியூசியம் பூங்காவில் பெண்கள் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் அருகே முளந்துருத்தி பகுதியைச் சேர்ந்தவர் இந்து. கேரள  மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் திட்ட அதிகாரியாக   பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பயிற்சிக்காக   திருவனந்தபுரம் வந்தார். நேற்று முன்தினம் காலை அருங்காட்சியக வளாகத்தில் உள்ள   பூங்காவில் அமர்ந்து இருந்தார். அப்போது அவரது அருகில் வந்த ஒருவர்  திடீரென உடைகளை களைந்து நிர்வாண போஸ்  கொடுத்தார். இது குறித்து இந்து,  மியூசியம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த  நபரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி விடுவிக்க முயன்றனர்.

ஆனால் அதிகாரி இந்து போலீசாருடன்  கடும் வாக்குவாதத்தில்  ஈடுபட்டார். அதன் பின்னர் போலீசார் அந்த நபர் மீது  வழக்கு பதிவு செய்வதாக கூறி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்  விசாரணையில் அவர் திருவனந்தபுரம் அருகே உள்ள வெங்காணூர் பகுதியை சேர்ந்த  சண்ணி என்பதும். இவர் இதுபோல் அடிக்கடி பூங்காவுக்கு வருகிறவர்களிடம்  நிர்வாண போஸ் ெகாடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது  வழக்குபதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

Tags : Woman officer nude ,Trivandrum Museum Park Trivandrum Museum Park , Woman officer,nude pose , Trivandrum,Museum Park
× RELATED மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி...