×

நாகாலாந்து சபாநாயகர் புற்றுநோயால் மரணம்

கோஹிமா: நாகாலாந்து மாநில தேசியவாத ஜனநாயக வளர்ச்சி கட்சி (என்டிபிபி) தலைவராக இருந்தவர் விகோ யோசூ (67). இவருக்கு மனைவியும், 10 குழந்தைகளும் உள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். விகோ யோசூ, நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியில் இருந்து 2 முறை எம்எல்ஏ ஆனவர். 2018ல் என்டிபிபி.யில் இணைந்து 3வது முறையாக எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு சபாநாயகர் ஆனார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Speaker ,Nagaland , Nagaland ,Speaker, dies ,cancer
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...