டெல்லி: டெல்லியில் கடந்த 119 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் கடும் குளிர் வாட்டுகிறது. ஜனவரி 3ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் கடுங்குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பனிமூட்டம் காரணமாக, டெல்லியில் ரயில், விமானப்போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. காற்றின் தரமும் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.