சென்னை: மண்ணின் மக்களை பூர்வீக நிலத்தைவிட்டு வெளியேற்றுவதுதான் பெருநகர வளர்ச்சியா? என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். சத்தியவாணி முத்து நகர் மக்கள் அப்புறப்படுத்துவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணாசாலையில் இருக்கும் சத்தியவாணி முத்து நகரில் வசித்து வருகிற மண்ணின் மக்களை அவர்களின் விருப்பத்திற்கும், உணர்வுக்கும் மாறாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி அகற்றி சென்னைக்கு வெளியே ஒதுக்குபுறமாகத் தள்ள முனையும் தமிழக அரசின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது.