×

பண்ருட்டி அருகே ரயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி

பண்ருட்டி: பண்ருட்டி அருகே அக்கடவல்லி கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு விவசாயமே முக்கியத்துவமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் அருகில் உள்ள ரயில்வே பாதையில் உள்ள தரைப்பாலம் வழியாகத்தான் செல்லவேண்டிய கட்டாயம் உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்த வழியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக பெய்த மழையால் இந்த தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள் இந்த வழியாக செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இன்று வாக்குப்பதிவு என்பதால் வாக்களிக்க பொதுமக்கள் செல்வதற்கு ஏதுவாக ஊராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Tags : public ,railway ground ,Panruti , Panruti, Railway Ground
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...