டெல்லி: ஓடும் ரயிலில் சாகசம் செய்வது சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மும்பை ரயில் படிக்கட்டில் நின்றபடி சாகசம் செய்த இளைஞர் தில்ஷன் பாலத்தின் கம்பியில் மோதி உயிரிழந்தார். உயிரிழந்த தில்ஷானின் சாகச விடியோவை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.