×

துறையூர் அருகே டிரான்ஸ்பார்மரை சுற்றி மண்டி கிடக்கும் முட்புதர்: விஷஜந்துக்களால் மக்கள் அச்சம்

துறையூர்: துறையூர் அருகே கோட்டபாளையத்திலிருந்து உப்பிலியபுரம் செல்லும் சாலை வழியில் ரைஸ் மில் அருகில் மின்வாரிய டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை சூழந்து முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. மேலும் இந்த டிரான்ஸ்பார்மர் மீதும் செடி,கொடிகள் வளர்ந்து படர்ந்துள்ளது.  இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மரில் ஏதாவது பழுது ஏற்பட்டால் மின்வாரிய ஊழியர்கள் வந்து உடனே மேலே ஏறிச் பழுதை சரி செய்ய முடியாத அளவுக்கு முட்புதர் மண்டியுள்ளது. மேலும் இந்த புதரில் விஷஜந்துக்கள் இருக்கலாம் என்ற அச்சத்தையும் எற்படுத்துகிறது.

இப்பகுதியில் மின்தடை ஏற்படும் காலங்களில் டிரான்ஸ்பார்மரின் மின்சாரத்தை துண்டிக்க மின்வாரிய ஊழியர்களுக்கு கடும் சிரமமடைந்து வருகின்றனர். மழைக்காலங்களில் மழைநீர் டிரான்ஸ்பார்மரை சுற்றி தேங்கி நிற்கும்போது அங்கிருக்கும் செடி கொடிகளை அப்பகுதியில் ஆடு மாடுகள் மேய்கின்றன. இதில் மின் கசிவு ஏதேனும் இருந்தால் மின்சாரம் பாய்ந்து கால்நடைகள் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பும் உள்ளது. எனவே இந்த டிரான்ஸ்பார்மர் கீழே உள்ள முட்புதர்களை அகற்றி மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீர்செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Thuraiyur ,Transformer , Thuraiyur, Transformer, Mudbudhur
× RELATED தென்மேல்பாக்கம் கிராமத்தில் எலும்பு...