தூத்துக்குடி: வேலன்புதுக்குளம் வாக்குச்சாவடி முறைகேடு தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மீதமுள்ள அதிகாரிகள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
