×

மகாராஷ்டிராவில் தனியார் நிறுவன உயரதிகாரி ஒருவரின் பேடிஎம் விவரங்கள் திருடி ரூ.13 லட்சம் மோசடி

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் தனியார் நிறுவன உயரதிகாரி ஒருவரின் பேடிஎம் விவரங்களை திருடி அவரது கணக்கிலிருந்து ரூ.13 லட்சத்தை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரேஷ் குமார் (60) ஆவார். இவர் அங்குள்ள இயந்திரத் தொழிற்சாலையில் மேலாண் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது செல்போனை தொடர்பு கொண்டு ஒரு நபர் பேசியுள்ளார். தம்மை பேடிஎம் தலைமைச் செயல் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு நரேஷ் குமாரின் பேடிஎம் விவரங்களை கேட்டிருக்கிறார். அதனை நம்பி அவரும் தமது பேடிஎம் விவரங்கள் அனைத்தையும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் அவரது செல் போனில் நேற்று பல குறுஞ்செய்திகள் வந்துள்ளது. அவற்றில் அவரது பேடிஎம் கணக்கிலிருந்து ரூ.13 லட்சம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த நரேஷ் குமார் இதுதொடர்பாக போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார் கூறும்போது, ராகுல் சர்மா, ரோஹித் சர்மா ஆகிய பெயர்களில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது, இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

Tags : company ,elite ,Rs ,Maharashtra Maharashtra , Maharashtra, private company, elite, BTM details, stealing, Rs.13 lakh fraud
× RELATED பங்கு மூலதனம் ரூ.130 கோடி ஆனா, தேர்தல்...