×

தெலங்கானாவில் பயங்கரம் தம்பி, 17 பெண்களை கொன்று பணம், நகை கொள்ளை: சீரியல் கில்லர் மனைவியுடன் சிக்கினான்

திருமலை: தெலங்கானாவில் தம்பி மற்றும் 17 பெண்களை கொன்று பணம், நகை கொள்ளையடித்த சீரியல் கில்லரை அவரது மனைவியுடன் போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், குச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் அலிவேலம்மா. இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பைக்கில் ஏற்றிச் சென்ற மர்ம நபர் படுகொலை செய்து தப்பி ஓடிவிட்டதாக புகார் வந்தது. இதுதொடர்பாக மகபூப் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இதில், போலீசாருக்கு அதே பகுதியில் உள்ள பழைய குற்றவாளியான காண்டீடு கிராமத்தைச் சேர்ந்த எருக்கல சீனு(45) மீது சந்தேகம் ஏற்பட்டது. இதற்கு காரணம் சீனு  ஏற்கனவே 9 பெண்களை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 2011ம் ஆண்டு வெளியில் வந்திருந்தார்.

மேலும், அலிவேலம்மாவை சீனுவின் ஸ்டைலில் கொலை செய்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து போலீசார் சீனுவை பிடித்து கடந்த 28ம் தேதி விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதில், சீனு சிறையில் இருந்து விடுதலையாகி வந்த பின் தனது தம்பி மற்றும் 7 பெண்களை கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டான். மேலும் கள்ளு கடைகளுக்கு மது குடிப்பதற்காக வரும் பெண்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பைக்கில் அழைத்து செல்வது வழக்கமாம்.

மேலும் செல்லும் வழியில் ஏற்கனவே போதையில் இருக்கும் பெண்களுக்கு மீண்டும் மீண்டும் மது வாங்கிக் கொடுத்து போதை முழுவதுமாக ஏறிய பின் அந்தப் பெண்களை கொலை செய்து அவர்களது பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பது இவரது ஸ்டைல். சீனு கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை தனது மனைவி சரசம்மாவிடம்(40) கொடுத்து வைத்திருந்தான். மேலும் சீனு, பெண்களை கொன்று நகைகளை கொள்ளையடிப்பது தெரிந்தும் அவரது மனைவி போலீசில் புகார் அளிக்கவில்லை. இதனால் போலீசார் சீனுவையும், அவரது மனைவி சரசம்மாவையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்கம், வெள்ளி ஆபரணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : terror strikes ,murders ,women ,Telangana ,Serial killer , Telangana, terror, brother, 17 girl, killed, money, jewelry, robbery
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது