மூணாறு: மூணாறில் இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால், குண்டளை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் குண்டளை அணைக்கட்டும் ஒன்றாகும். இடுக்கி மாவட்டத்தில் இரண்டாவது ஆர்ச் அணையாக கருதப்படும் இந்த அணையை பார்வையிட தற்பொழுது சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
அணையின் நீர்தேக்க பகுதியில் படகு சவாரி செய்தும், சிறுவர் பூங்காவில் பொழுதை போக்கியும் சுற்றுலா பயணிகள் மகிழ்கின்றனர். தற்போது இப்பகுதியில் இதமான சீதோஷண நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குண்டளை அணையை பார்வையிட வரும் பயணிகளுக்கு போதிய அளவில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.