புதுச்சேரி: புதுச்சேரியில் திருடன் ஒருவன் பட்டப்பகலில் வங்கி மேலாளர் வீட்டில் சுவர் ஏறி குதித்து பயமில்லாம் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவளக்குப்பம் பகுதியில் வங்கி மேலாளர் வீட்டின் வாசலில் இருச்சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இளைஞர் ஒருவர் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்கிறார்.
சிறுது நேரத்தில் வீட்டில் கொள்ளையடித்து விட்டு இந்த வித பதற்றமின்றி வெளியே வந்து நிறுத்தி வைத்து இருந்த தனது இரு சக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளான். வங்கி மேலாளர் வீட்டில் கொள்ளையடித்தது தவளக்குப்பத்தை சேர்ந்த பாலமகேந்திரன் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாலமகேந்திரனை கைது செய்துள்ள போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.