கச்சத்தீவு: கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டியடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் விரட்டிய இலங்கை கடற்படையினர் பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்ததாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.