×

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு

மணமேல்குடி: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய 2  இடங்களில் துறைமுகம் இயங்கி வருகிறது. ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திலிருந்து  3 விசைப்படகுகளில் 13 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 13 பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்திய 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு  சென்றனர்.
மணமேல்குடி அருகே 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.



Tags : fishermen ,Sri Lankan Navy Thirteen ,Sri Lankan Navy , Thirteen fishermen held captive by Sri Lankan Navy
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக...