×

குண்டர் சட்டத்தில் 8 பேர் கைது

சென்னை: சென்னையில் குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் ஆசாமிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  அதன்படி செங்கல்பட்டு, நாதம் வில்லேஜ், சுந்தர விநாயகர் தெருவை சேர்ந்த ஜான் (எ) முகமது ஜான் (38), கோடம்பாக்கம், வரதராஜபேட்டை, ராஜா பொர்னிகர் தெருவை சேர்ந்த பிரசாத் (31),

நுங்கம்பாக்கம், புஷ்பாநகர், கே-பிளாக் பகுதியை  சேர்ந்த இமான் (எ) ஜெயபால் (27), சூளைமேடு, கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (37), புது பெருங்களத்தூர், பாரதிநகர், கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ் (எ) சுரேஷ் கண்ணன் (31), திருவள்ளூர் நேருநகர்,  திருவள்ளுவர் தெருவை சேர்ந்த தினேஷ்குமார் (24), சென்னை, ஜி.ேக.எம்.காலனி, சரோஜினி தெருவை சேர்ந்த சந்தோஷ்குமார் (25), திரு.வி.க.நகர், ராம் நகர் 3வது மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ்குமார் (24) ஆகிய 8 பேரும்   தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. எனவே, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் 8 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags : 8 arrested over thug act
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...