×

இ.பி.எஸ், ஓ.பி.எஸ்.சை சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்

சென்னை: காங்கிரஸ் மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்.சை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமியை, அவரது இல்லத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம். சிவக்குமார், மாநில ராஜிவ்காந்தி போர்ப்படை துணைத் தலைவர் கதிரவன் ரோச், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் ஏ.சிவன் பாண்டியன், நாங்குநேரி தொகுதி ஊடகப் பிரிவு தலைவர் தருவை சு.காமராஜ், ராதாபுரம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளங்கவி, தச்சை மண்டல துணைத் தலைவர் அந்தோணி சாமுவேல், பாளையங்கோட்டை ஆர்.ஜி.பி.ஆர்.எஸ். ஒருங்கிணைப்பாளர் கமலநாதன், மேலப்பாளையம் முத்து, பாளையங்கோட்டை வட்டார செயலாளர் மாணிக்கம், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த பெலிக்ஸ் சாமுவேல், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சாமிநாதன் உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் பிராங்கிளின் ஜோஸ், துணை தலைவர் நிவீன்ஸ்டர், சட்டமன்ற தொகுதி தலைவர் சத்தியநாராயணன், மாநகர் மாவட்டப் பொருளாளர் பட்டுராஜா, மாப்பிள்ளையூரணி சேர்மபாண்டி, திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரைச் சேர்ந்த டாக்டர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 18 பேர் நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வின் போது, திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை என்.கணேசராஜா, திருநெல்வேலி பகுதி, 42வது வட்ட செயலாளர் காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதே போல் இவர்கள் அனைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை, அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.

Tags : executives ,Congress ,AIADMK ,OPS , EPS , OPS met , Congress executives , joined AIADMK
× RELATED சொல்லிட்டாங்க…