சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் புதிதாக 2 பகுதி தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமாகா வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பிஜூ சாக்கோ வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்மாநில காங்கிரஸ் ஆர்.கே.நகர் தொகுதியின் பகுதி தலைவர்களாக இருந்த டி.டி.ஜனார்த்தனன், ஏ.அண்ணாமலை ஆகிய இருவரும் கட்சி விரோத மற்றும் அவப்பெயர் ஏற்படும் நடவடிக்கையில் ஈடுபட்டதால், இருவரும் கட்சி அடிப்படை உறுப்பினர் மற்றும் பகுதி தலைவர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளனர்.இவர்களுக்கு பதிலாக ஆர்.கே.நகரின் ஒரு பகுதி தலைவராக டி.சுதாகர், மற்றொரு பகுதி தலைவராக ஜெ.மாரி ஆகிய இருவரும் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஒப்புதலோடு பணிகளை தொடர்கின்றனர். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.