×

தெற்கு ரயில்வே சார்பில் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்

சென்னை: தெற்கு ரயில்வே சார்பில் சிக்னல் மற்றும் தொலை தொடர்பில் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. தெற்கு ரயில்வே சார்பில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு சென்னை பிரிவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் நேற்று ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ரயில்வே வாரிய சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு உறுப்பினர் பிரதீப் குமார், ரயில்வே வாரியத்தின் முதன்மை செயல் இயக்குனர் அன்சுல் குப்தா மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலை தொடர்பு என்ஜினீயர் எஸ்.கே.கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கருத்தரங்கத்தில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Seminar ,Southern Railways ,Technology and Seminar ,Southern Railway , Southern Railway, Technology and Seminar
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...