×

வத்தலக்குண்டு அருகே வாக்களித்து விட்டு திரும்பிய தந்தை, மகன் பஸ் மோதி பலி

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கன்னிமார் கோயிலை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (60). இவரது மகன் மோகன்பாண்டி (25). இருவரும் உப்பு வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவதற்காக நேற்று காலை சொந்த ஊரான விராலிபட்டி ஊராட்சி ராமநாயக்கன்பட்டிக்கு டூவீலரில் சென்றனர். அங்கு ஓட்டு போட்டு விட்டு பகல் 12 மணியளவில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

டூவீலரை மோகன்பாண்டி ஓட்டி வந்தார். வத்தலக்குண்டு - பெரியகுளம் சாலையில் பழைய வத்தலக்குண்டு பிரிவு அருகே வந்தபோது எதிரே திண்டுக்கல்லில் இருந்து தேனி சென்ற தனியார் பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் டூவீலர் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயமடைந்தனர். தங்கப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோகன்பாண்டியை சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்

Tags : voting ,Vatalakundu Vattalakundu , Vattalakundu, voting left, returning father, son, bus collides, kills
× RELATED 6 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு