×

கோயம்பேடு மார்க்கெட் அருகே அம்மா உணவகத்தில் மதுபிரியர்கள் தஞ்சம்: சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

அண்ணாநகர்: கோயம்பேட்டில் உள்ள அம்மா உணவகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அட்டகாசம் செய்து வருகின்றனர். எனவே அங்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  சென்னை மாநகராட்சி, 10வது மண்டலம், 127வது வார்டு கோயம்பேடு மார்க்கெட் அருகே சுமார் 500க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக இங்கு ஒரு அம்மா உணவகம் நீண்டகாலமாக சுற்றுச்சுவர் பாதுகாப்பு இல்லாமல் இயங்கி வருகிறது. இந்த உணவகம் திறந்தவெளியாக உள்ளதால் இங்கு இரவு, பகலாக பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. மது அருந்தும் பாராகவும், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களின் விற்பனை மையமாகவும் திகழ்கிறது. இந்த உணவகத்திலேயே குடிமகன்கள் போதையில் அடிதடி தகராறிலும் ஈடுபடுகின்றனர்.இவற்றை தட்டி கேட்கும் பெண் ஊழியர்களை சமூக விரோத கும்பல்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

இதனால் உணவகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் பெரும் பீதியுடன் பணி செய்யும் நிலை உள்ளது. இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  எனவே, அம்மா உணவகத்தை சுற்றிலும் சுவர் எழுப்பி, பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், இப்பகுதியில் போலீசார் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கு சம்பந்தப்பட்டதுறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.


Tags : Brewers ,mother restaurant ,market ,Coimbatore ,Mom's Restaurant ,circuit ,Near Coimbatore Market Brewers Take Refuge , Coimbatore Market, Mother Restaurant, Brewers, Circuit
× RELATED தேர்தல் கெடுபிடியால் களையிழந்த...