×

குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் டிஜிட்டல் மின் மீட்டர் திருடிய வாலிபர் கைது

சென்னை: ஆர்.ஏ.புரம் வல்லீஸ்வரன் தோட்டம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் டிஜிட்டல் மின் மீட்டர்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10 மீட்டர்களையும் பறிமுதல் செய்தனர். சென்னை ஆர்.ஏ.புரம் வல்லீஸ்வரன் தோட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இங்குள்ள சில கட்டிடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளன. இந்த குடியிருப்பில் உள்ள டிஜிட்டல் மின் மீட்டர்கள் மட்டும் மாயமானது.  இதுகுறித்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கோட்ட உதவி செயற்பொறியாளர் பிரேம்குமார் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில்  ேநற்று முன்தினம் இரவு ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது வாலிபர் ஒருவர், குடியிருப்பில் உள்ள டிஜிட்டல் மின்மீட்டரை கழற்றி கொண்டிருந்தார். இதை கவனித்த போலீசார் அதிரடியாக வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் கண்ணகி நகர் 3வது அடுக்கு பகுதியை சேர்ந்த சேட்டு (எ) சவுந்தரராஜன் (30) என தெரிய வந்தது. இவர், திட்டமிட்டு டிஜிட்டல் மின் மீட்டர்களை திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சேட்டுவை கைது ெசய்தனர். அவரிடமிருந்து 10 டிஜிட்டல் மின் மீட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Tags : apartment ,Arrest ,Stolen Youth , Marruvariya the cottage, digital power meter, the young men arrested
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...