×

2 வீடுகளில் கொள்ளை

பல்லாவரம்: பீர்க்கன்காரணை, டி.டி.கே நகர், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புரோலிக் (40). நேற்று முன்தினம் இரவு புரோலிக் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று காலை வீடு திரும்பியபோது கதவு திறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில்  இருந்த வெள்ளி பொருட்கள் கொள்ளைபோய் இருந்தது. இதேபோல் டி.டி.கே நகர் 3வது பிரதான சாலையை சேர்ந்த இசைஞானி (35) என்பவர் வீட்டையும் உடைத்து வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தன.  இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்றும். புகார் தெரிவித்தாலும் போலீசார் வாங்க மறுப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


Tags : homes , Robbery
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை