சென்னை : இலங்கை சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் இசைப்பதில்லை என்ற அந்நாட்டின் முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்ற இலங்கை அரசின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய அரசு உடனே தலையிட்டு இலங்கையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதற்கு முடிவு கட்ட ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.