லக்னோ : பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 498 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் 498 பேர் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக உ.பி. அரசு குறிப்பிட்டுள்ளது. மீரட், முசாபர் நகர், லக்னோ உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது.