×

பிலிப்பைன்சில் சோகம் பான்போன் புயல் தாக்கி 20 பேர் பலி

மணிலா:  பிலிப்பைன்சில் தாக்கிய பான்போன் புயலுக்கு 16 பேர் பலியாகி உள்ளனர்.  பிலிப்பைன்சில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வந்த நிலையில், அந்நாட்டை பான்போன் புயல் தாக்கியது.  மணிக்கு 195 கிமீ வேகத்தில் சூறாவளி வீசியது. இதனால், ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மின் கம்பங்கள், மரங்கள் உடைந்து விழுந்தன. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கலிபோ விமான நிலையத்தை   மிகவும் மோசமாக புயலால் தாக்கியுள்ளது. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால், இன்னும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பான்போன் புயலால் நடந்த விபத்துகளில் 20 பேர் பலியாகி இருப்பதாக பேரிடர்  மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : storm ,Philippines ,Tragedy drinks storm , Philippines, panpon storm, 20 people killed
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...