×

அரசு தேர்வில் ஆள்மாறாட்டம் அக்கா, தங்கையிடம் விசாரணை

திருச்சி: அரசு தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது தொடர்பாக அக்கா, தங்கையிடம் விரைவில் விசாரணை நடத்த திருச்சி போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை குறுக்கெழுத்து தேர்வு மையம் சார்பில் அரசு தேர்வு கடந்த பிப்ரவரியில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடந்தது. திருச்சிக்கான மையம் அரியமங்கலம் எஸ்ஐடியில் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு தேர்வு எழுத மதுரையை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டிருந்தது. இதில் ராமலட்சுமிக்கு பதிலாக அவரது தங்கை மீனாட்சி தேர்வு எழுதி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி சென்னையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த ஆள்மாறாட்டம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க திருச்சியில் நந்திகோயில் தெருவில் உள்ள தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை குறுக்கெழுத்து தேர்வு மையத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் அரியமங்கலம் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விரைவில் இருவரையும் அரியமங்கலம் காவல்நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : sister ,Inquiry , government exam, impersonation, sister, sister, investigation
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு குறித்து...