×

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்காளர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தேமுதிக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து கூட்டாக இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால்தான் கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான வளர்ச்சி பணிகள் நடைபெறும்.

மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று கிராமங்கள் வளர்ச்சி பெற இந்த உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக வேட்பாளர்களுக்கு “முரசு” சின்னத்திலும், கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னத்திலும் வாக்களித்து அனைவரையும் வெற்றியடைய செய்திட வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Vijayakanth ,voters ,elections , Vijayakanth appeals ,voters , rural local elections
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...