×

அமைச்சர் ஜெயக்குமார் மீனவர்களின் விரோதி : வெற்றிவேல் கடும் தாக்கு

சென்னை :  அமைச்சர் ஜெயக்குமார் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. மீனவர்களுக்கு விரோதியாகத்தான் செயல்படுகிறார் என்று அமமுக பொருளாளர் வெற்றிவேல் கூறினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொருளாளர் பி.வெற்றிவேல், அமைப்பு செயலாளர் நேதாஜி கணேசன் உட்பட பலர் சுனாமியால் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு  மலர்தூவி  அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் வெற்றிவேல் கூறியதாவது: அமைச்சர் ஜெயக்குமார் கண்டபடி பேசி வருகிறார். கண்டிப்பாக வருத்தப்படுவார். அமைச்சர்கள் யாரும் இதுபோல் பேசுவதில்லை. இவரும் ராஜேந்திர பாலாஜியும்தான் பேசுகிறார்கள்.

கடுமையான வறட்சியில்  இரண்டு மாதங்கள் நாங்கள் தினசரி பொதுமக்களுக்கு லாரி மூலம் தண்ணீர் கொடுத்தோம்.  அமைச்சரான ஜெயக்குமார் தொகுதிக்கு என்ன செய்தார். எதுவும் செய்யவில்லை. ஆனால், மீனவர்களுக்கு  விரோதியாகத்தான் செயல்படுகிறார். இந்த தொகுதியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பல்வேறு மிரட்டல்கள் தொந்தரவுகள் கொடுத்தாலும் கண்டிப்பாக 95% உள்ளாட்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கடி தொகுதிக்கு வராவிட்டாலும் அவரது பணியை நாங்கள்  இருந்து முழுமையாக செய்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Jayakumar ,fisherman ,vetrivel , Minister Jayakumar's, fisherman's enemy,vetrivel
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...